சுதந்திர தினத் திரு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வட்டார கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அது பற்றிய விபரம்:
கட்டுரைப் போட்டி:
1 . தலைப்பு: தேசிய வளங்களும் நாட்டு முன்னேற்றமும்
2 . கட்டுரையை 8 பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து (A 4 அளவு) எமது முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
S.நாராயணன்,
சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு
41 , சித்தப்பா அவன்யூ,
ராயபுரம் பிரதான சாலை,
திருப்பூர் - 641 601.
3 . தாளின் ஒருபக்கம் மட்டுமே கட்டுரை தட்டச்சு செய்யப்பட வேண்டும். பின்புறம் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவரின் பெயரை எழுத வேண்டும்.
4 . கல்லூரி முதல்வரின் சான்று ஒப்பத்துடன் கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டும். உடன் மாணவரின் முழு விபரமும் இணைக்கப்பட வேண்டும்.
5 . ஒரு கல்லூரியில் இருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம்.
6 . கட்டுரைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: ஆக. 10.
7 . நடுவர்கள் தேர்வு செய்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு.
-------------------------------------------------------------------------------------
பேச்சுப் போட்டி:
1 . தலைப்பு: சும்மாவா வந்தது சுதந்திரம்?
2 . கால அவகாசம்: 10 நிமிடங்கள்.
3 . கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் ஒப்புதலுடன் தங்கள் பெயரை தொலைபேசியில் ஆக. 9 ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
4 . ஒரு கல்லூரியில் இருந்து 10 மாணவ மாணவியர் மட்டுமே பங்கேற்கலாம்.
5 . போட்டி நடைபெறும் இடம்: பார்க் கலை அறிவியல் கல்லூரி, சின்னக்கரை, திருப்பூர்.
6. போட்டி நடைபெறும் நாள்: 10 .08 .2012 , வெள்ளிக்கிழமை, மதியம் 12.00 மணி.
7 . போட்டியில் தேர்வு செய்யப்படும் முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
-------------------------------------------------------------------------------------
மேற்படி போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு: வீர. ராஜமாணிக்கம் - 72008 55666
கே .சிவகுமார் - 98949 33877
.
No comments:
Post a Comment