சுதந்திர தின நிறைவு விழா:
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் |
தினமணி ஆசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கிறார் தினமணி குடும்பத்தைச் சேர்ந்த பி.ஒய்.தட்சிணாமூர்த்தி. |
ஈரோடு சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூலை நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலம் வெளியிட, சக்தி எம். சுப்பிரமணியம் பெறுகிறார். அருகில் நூலாசிரியர் சு.சண்முகவேல். |
டி.ஏ.ஷான் தயாரித்த 'தேசபக்திப்பாடல்கள்' குறுந்தகடை சக்தி எம்.சுப்பிரமணியம் வெளியிட, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதி பெறுகிறார். |
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து பேசுகிறார், திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம். |
சுதந்திர தினத் திருவிழாவின் முத்தாய்ப்பாக, விழாப் பேருரை ஆற்றுகிறார் 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன். |
தினமணி ஆசிரியருக்கு தனது 'உடையும் இந்தியா' புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்குகிறார் எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன். |
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் IDCC நிர்வாகியான ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன். |
திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியத்துக்கு IDCC நிர்வாகியும் திருப்பூர் அறம் அறக்கட்டளை பொறுப்பாளருமான வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார். |
தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதிக்கு IDCC நிர்வாகியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளருமான எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார். |
நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலத்துக்கு பத்திரிகையாளர் வ.மு.முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார். |
விழா நிறைவில் மகிழ்ச்சியுரை ஆற்றுகிறார் IDCC உறுப்பினர் பி. சத்யன். |
காந்திய மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி நடத்திவரும் கையெழுத்து இயக்கத்தின் அங்கமாக, விழா மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனிடம் கையெழுத்து பெறும் காந்திய மக்கள் இயக்க நண்பர்கள். |
சுதந்திர தினத் திருவிழா இனிதே நிறைவடைந்த களிப்பில், தினமணி ஆசிரியருடன் விழாக்குழுவினர். |