அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Wednesday 25 July 2012

பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின விழா போட்டிகள்



சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் வட்டார   உயர்நிலைப் பள்ளிகள்,  மேல்நிலைப் பள்ளிகளில்   பயிலும் மாணவ மாணவிகளுக்கு  கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்த உள்ளோம். 
அது குறித்த விபரம்:

ஓவியப் போட்டிகள்:
  • 6 , 7 , 8  வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    மரம் வளர்ப்போம்
  • 9 , 10 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    மனிதநேயம் காப்போம்
  • 11 , 12 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள்
மேற்கண்ட தலைப்பில் ஓவியம் (கோட்டுப்படம் அல்லது வண்ணப்படம்) வரைய வேண்டும்.

போட்டி நடைபெறும் நாள்: 10.08.2012, வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணி

இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அம்மாபாளையம், திருப்பூர்.

விதிமுறைகள்:

1 . ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், 6, 7, 8 வகுப்புக்கள், 9,10 வகுப்புக்கள், 11,12 வகுப்புக்கள் என  ஒவ்வொரு பிரிவிலும் தலா இருவர் பங்கேற்கலாம்.

2. பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரின் பரிந்துரையுடன் போட்டிக்கு வர வேண்டும்.

3 . ஓவியப் போட்டிக்கு A 4 தாளில் படம் வரைய வேண்டும்.

4.  ஓவியப் போட்டி கால அவகாசம்: 90 நிமிடங்கள் 

------------------------------------------------------------------

கட்டுரைப் போட்டிகள்:
  • 6, 7, 8  வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்காண தலைப்பு:

    சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு.
  • 9, 10 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    தேசிய ஒருமைப்பாட்டில் மாணவரின் பங்கு.
  • 11, 12 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    வளமான இந்தியாவுக்கு எனது ஆலோசனைகள்.

விதிமுறைகள்:


1. கட்டுரைப் போட்டிக்கு 6,7,8  வகுப்பு மாணவர்கள்  A 4  தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.  9, 10, 11,12 வகுப்பு மாணவர்கள் A 4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

2.  கட்டுரை எழுதும் தாளின் பின்புறம் மாணவர்/ மாணவி பெயர் எழுதப்பட வேண்டும்.

3. கட்டுரைகளை மாணவர்கள் போட்டிக்கான விதிமுறைப்படி எழுதி,  தங்கள் பள்ளி  தலைமை ஆசிரியர், முதல்வரிடமே ஆக. 9 ம் தேதிக்குள்  அளிக்க வேண்டும். அந்தக் கட்டுரைகளை போட்டி அமைப்புக் குழுவினர் பள்ளிக்கே வந்து பெற்றுக்கொள்வர்.

4. பள்ளித் தலைமை ஆசிரியர் / முதலவர் இக்கட்டுரைகளை பரிந்துரைத்து  அளிக்க வேண்டும்.

------------------------------------------------------------------ 


பரிசும் சான்றிதழும்:

1. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனிப் பிரிவிலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு தனிப் பிரிவிலும் படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படும்.

2. ஒவ்வொரு குழுப் பிரிவிலும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மூவருக்கு  பரிசுகள் வழங்கப்படும்.

3. போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

4.  நடுவர் குழுவினரின் முடிவே இறுதியானது.


தொடர்புக்கு:
  • திரு. Y.S.ரஞ்சித் - 98429 30969
  • திரு. K.தனசேகரன் - 99429 56555
  • திரு. S.நாராயணன் - 98940 31101

.

No comments:

Post a Comment