அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 27 July 2012

கல்லூரி மாணவர்களுக்கு இரு போட்டிகள்


சுதந்திர தினத் திரு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வட்டார கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அது பற்றிய விபரம்:

கட்டுரைப் போட்டி:

1 . தலைப்பு: தேசிய வளங்களும் நாட்டு முன்னேற்றமும்

2 .  கட்டுரையை 8 பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து (A 4 அளவு) எமது முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  முகவரி:
          S.நாராயணன்,
         சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு
         41 , சித்தப்பா அவன்யூ,
         ராயபுரம் பிரதான சாலை,
         திருப்பூர் - 641 601.

3 . தாளின் ஒருபக்கம் மட்டுமே கட்டுரை தட்டச்சு செய்யப்பட வேண்டும். பின்புறம் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவரின் பெயரை எழுத வேண்டும்.

4 . கல்லூரி முதல்வரின் சான்று ஒப்பத்துடன் கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டும். உடன் மாணவரின் முழு விபரமும் இணைக்கப்பட வேண்டும்.

5 . ஒரு கல்லூரியில் இருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம்.

6 . கட்டுரைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: ஆக. 10.

7 . நடுவர்கள் தேர்வு செய்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு.


------------------------------------------------------------------------------------- 


பேச்சுப் போட்டி:

1 . தலைப்பு: சும்மாவா வந்தது சுதந்திரம்?

2 . கால அவகாசம்: 10 நிமிடங்கள்.

3 . கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் ஒப்புதலுடன் தங்கள் பெயரை தொலைபேசியில் ஆக. 9 ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

4 . ஒரு கல்லூரியில் இருந்து 10 மாணவ  மாணவியர் மட்டுமே பங்கேற்கலாம்.

5 . போட்டி நடைபெறும் இடம்:  பார்க் கலை அறிவியல் கல்லூரி, சின்னக்கரை, திருப்பூர்.

6.  போட்டி நடைபெறும் நாள்: 10 .08 .2012 , வெள்ளிக்கிழமை, மதியம்  12.00 மணி.

7 .  போட்டியில் தேர்வு செய்யப்படும் முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


-------------------------------------------------------------------------------------

 
மேற்படி போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: வீர. ராஜமாணிக்கம் - 72008 55666
                         கே .சிவகுமார் - 98949 33877


.

No comments:

Post a Comment