அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 10 August 2012

சுதந்திர தினத் திருவிழா சுவரொட்டி

திருப்பூரில் நடைபெற உள்ள சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் நகரம் முழுவதும் ஓட்டப்பட உள்ள 1000 சுவரொட்டிகளின்  வடிவம் இது.   திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு இதனை அச்சிட்டுள்ளதுடன், நகரம் முழுவதும் ஓட்டும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. அதன் நிர்வாகிகளுக்கு நன்றி.





.


.

No comments:

Post a Comment